search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயிண்டர் கைது"

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன்.
    • டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள நவாசாலையில் உள்ள தோட்டத்தில் நேற்று சிறுவன் உடல் மிதந்தது. தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தியதில் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவை சேர்ந்த பெயிண்டரான முனியாண்டி(வயது 45) என்பவரின் மகன் மகிழன்(6) என்பதும், பெற்ற மகன் என்றும் கூட பாராமல் முனியாண்டி சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது முனியாண்டி கூறியதாவது:-

    எனது மனைவி கார்த்தீஸ்வரி(40). எனக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் மகிழன் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மனைவி குறித்து அவதூறாக பேசினார்.

    அந்த நாளில் இருந்தே அந்த நபர் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அதனால் எனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன். இதனால் எங்களுக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மகன் மகிழன் படிக்கும் பள்ளிக்கு சென்று அவனை அழைத்து சென்றேன். அவனுக்கு சாப்பாடு, குளிர்பானம், புதிய ஆடை வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன். அப்போது மது போதையில் எனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார்.
    • சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அன்னூர் பொன்னேகவுண்டன்புதூரை சேர்ந்த பெயிண்டர் சந்திரகுமார் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி பழகி வந்தனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார். பின்னர் 2 பேரும் அங்குள்ள பழைய கட்டிடத்தில் சந்தித்தனர். அப்போது சந்திரகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைகேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சந்திரகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சந்திரகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட மூதாட்டி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 65) பெயிண்டர். இவர், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.

    இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சுதாபிரியா ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார்
    • சுதாபிரியா ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார்

    கோவை,

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). பெயிண்டர். இரவது மனைவி சுதாபிரியா (35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நல்லமுத்து அடிக்கடி சுதாபிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுப்பட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த நல்லமுத்து, சுதாபிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். அவருக்கு முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சுதாபிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் இதுகுறித்து சுதாபிரியா செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நல்லமுத்துவை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவனுக்கு காதல் திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்டுள்ளான்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 40). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தபோது கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியான உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ஆரோக்கிய தாஸ் (31) என்பவரை கைது செய்தனர்.

    பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவனுக்கு காதல் திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவன் புக்குளம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளான். சம்பவத்தன்று நள்ளிரவில் ஆரோக்கியதாஸ் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த தனலட்சுமியின் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்டுள்ளான். அத்துடன் மேட்டுப்பாளையத்தில் ரெயிலில் சங்கிலி பறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவன் மீது உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணைத் தாக்கி விட்டு டி.வி.யை திருடியதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கைதான ஆரோக்கியதாசை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ் பெண்கள் என்றாலே ஒரு வித வெறுப்புடன் செயல்பட்டுள்ளான். சைக்கோவாக செயல்பட்ட அவன் குறிப்பாக பெண்கள் யாராவது தனியாக இருந்தால் அவர்களை முதலில் சரமாரி தாக்குவதுடன் அவர்களிடம் உள்ள பணம், நகைகளை பறித்துள்ளான். சிலரை பலாத்காரமும் செய்துள்ளான். அது போல் கடந்த 2 வருடத்திற்கு முன்பு தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக்கொன்று கற்பழித்துள்ளான். தற்போது உடுமலை புக்குளம் பஸ் நிறுத்தத்தில் தனியாக இருந்த மனநிலை பாதித்த பெண் தனலட்சுமியை தலையில் அடித்துக்கொன்று பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார்.
    • கல்லை எடுத்து தலையில் தாக்கினார்.

    கோவை,

    தென்காசியை சேர்ந்தவர் சம்சுதின் (வயது 38). டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார்.

    ஆப்பிலை பொ ள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பஸ் நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார்.

    அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார். அவர் சம்சுதின் அருகில் வந்து அவரிடம் எங்கே செல்கிறாய் என கேட்டார்.

    அதற்கு அவர் தென்காசியில் இருந்து வந்ததாகவும் திரும்பி ஊருக்கு செல்வதாகவும் கூறினார்.

    அப்போது அந்த மர்ம நபர் எதற்காக இங்கே நிற்கிறாய் உடனே இங்கு இருந்து செல் என்றார்.

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கினார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த சம்சுதினை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சம்சுதின் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்சுதினை தாக்கிய பாலக்காட்டை சேர்ந்த பெயிண்டர் ராபட் விஜயன் (45) என்பவரை கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை.
    • காளிமுத்துவின் சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் தன்ஷிகா (8). காளிமுத்து டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறுமி தன்ஷிகா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகளை தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    மனைவி பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சில நாட்களுக்கு பிறகு மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் காளிமுத்து மட்டும் இருந்துள்ளார். அவரிடம் தன்ஷிகா குறித்து கேட்டபோது, சிவகங்கையில் தனது அக்காள் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி காளிமுத்து வீட்டில் இருந்த பரணில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பரணில் இருந்த ஒரு சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதனுள் பிளாஸ்டிக் வாளியில் அழுகிய நிலையில் சிறுமி தன்ஷிகா பிணம் இருந்தது.

    தனது மகள் பிணமாக கிடப்பதை கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி தன்ஷிகாவை அவளது தந்தை காளிமுத்துவே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை யாருக்கும் தெரியாமல் வாளிக்குள் அடைத்து சாக்கு மூட்டையில் கட்டி வீட்டு பரணில் தூக்கி வைத்து சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    அவரை போலீசார் தேடிய போது தலைமறைவாகி விட்டார். பெற்ற மகளை கொடூரமாக கொன்ற காளிமுத்துவை பிடிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோர் உத்தரவின் பேரில் தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்துபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை. அவரது சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.

    இந்த நிலையில் போலீசில் சிக்காமல் இருக்க காளிமுத்து பிச்சைக்காரர் வேடத்தில் திரிவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் மதுபானக்கடை அருகே படுத்திருந்த காளிமுத்து போலீசாரிடம் நேற்றிரவு சிக்கினார்.

    பிச்சைக்காரர் வேடத்தில் இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் பெற்ற மகளை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கூறியதாவது:-

    எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நான் மாற்றுத்திறனாளி என்றபோதிலும் டெய்லர் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இருவரும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தோம்.

    சம்பவத்தன்று எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மகள் தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு சென்றேன். எனக்கு வாழ பிடிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு எனது மகளுடன் ஜெய்ஹிந்துபுரம் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கு எனது மனைவி இல்லை. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது மகள் மீது எனக்கு அதிக பாசம் உள்ளது. இதனால் இறந்த பிறகு அவளை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று நினைத்தேன்.

    ஆகவே மகளை கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். அதன்படி மகள் தன்ஷிகாவை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்பு அவளது கை, கால்களை கட்டி வாளிக்குள் அடைத்து மூட்டை கட்டி வீட்டு பரணில் வைத்தேன்.

    அதன்பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள பயந்து வெளியூருக்கு சென்று விட்டேன். பின்பு சிவகங்கை, ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தேன். அங்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தினேன். மதுரையில் திரிந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காளிமுத்து கூறும் தகவல் உண்மைதானா? என்று போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    கோவை :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதனையடுத்து இளம்பெண்ணுக்கு நேருநகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்தி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் கார்த்தியுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இளம்பெண் தனியாக இருந்தார். வீட்டிற்குள் கார்த்தி அத்துமீறி நுழைந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு பழகுவதை நிறுத்திய கள்ளக்காதலியை வீடு புகுந்து தாக்கிய கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • கொலை சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக இருந்த நவீனை தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்சி சாலை ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 18-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    நாமக்கல்-திருச்சி சாலை பழைய கோர்ட்டு கட்டிடம் அருகே அவர் காரை நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

    குமரேசனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் 19-ந்தேதி அதிகாலை குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி துர்கா மற்றும் உறவினர்கள், குமரேசன் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார், கொலையாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து குமரேசன் உடலை வாங்கினர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி துர்கா, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் குமரேசனை தீர்த்துக் கட்டிய நபர் நாமக்கல் மாவட்டம் ஜெய்நகரை சேர்ந்த பெயிண்டர் நவீன் (வயது 22) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    சம்பவத்தன்று குமரேசன் மது குடித்துவிட்டு காரை பழைய கோர்ட்டு கட்டிடம் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக நவீன் சென்று கொண்டிருந்தார். அவரை, குமரேசன் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் நவீன், குமரேசனிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றவே நவீன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குமரேசனின் கழுத்தில் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடினர். இதை கண்டதும், நவீன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட நவீன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு
    • உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்தார்

    கோவை :

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படித்து முடிந்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அந்த பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த லங்கேஷ்வரன் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் லங்கேஷ்வரன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் திருமண ஆைச காட்டி அவருடன் ஜாலியாக இருந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே லங்கேஷ்வரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி தனது பெற்றோரிடம் துணிகளை துவைக்க வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்த லங்கேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சிறுமியை திருமணம் ஆசை காட்டி கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கணுவாயில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்து உள்ளார். பின்னர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தது சிறுமியிடம் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுமியிடம் உல்லாசமாக இருந்து அவரை கடத்தி சென்று திருமணம் செய்த லங்கேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.
    • திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படித்து முடிந்து இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அந்த பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த லங்கேஷ்வரன் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் லங்கேஷ்வரன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி அவருடன் ஜாலியாக இருந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே லங்கேஷ்வரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி தனது பெற்றோரிடம் துணிகளை துவைக்க வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்த லங்கேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கணுவாயில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார். பின்னர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததும், சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுமியிடம் உல்லாசமாக இருந்து அவரை கடத்தி சென்று திருமணம் செய்த லங்கேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×